மவுனம் உடைத்து பேசுகிறேன்....
என் மனசு சிறகு கட்டி பறந்த அந்த நாட்களைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன், என்னை தோள்களில் சுமந்த புழுதி படிந்த என்தெருக்கள். வாசனை வீசிக்கொண்டே வசீகரமாய் காட்சி அளித்த என்முற்றத்து மல்லிகை, என்பின்னேரங்களை, இன்பமாக்கிய நண்பர்கள், நான் குதுகளித்து மகிழும் எங்களூர் மலை உச்சி, காலாற நடந்து நட்புக்கொண்டாடிய அந்த நீண்ட குளக்கட்டு, அவ்வப்போது நண்பர்களுடனான படகுப் பயணம், மீன் பிடித்து மகிழ்ந்த அந்த மீளாத நிமிசங்கள், அப்பப்பா .... சொல்லி சுகம் காண முடியாத அற்புதப் பொழுதுகள் அவை, இன்னும் இன்னும் மனது சேமித்து ஆனந்தப் படும் அழியாத அனுபவங்கள்,.....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக