ஞாயிறு, 18 அக்டோபர், 2009

மவுனம் உடைத்து பேசுகிறேன்....

என் மனசு சிறகு கட்டி பறந்த அந்த நாட்களைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன், என்னை தோள்களில் சுமந்த புழுதி படிந்த என்தெருக்கள். வாசனை வீசிக்கொண்டே வசீகரமாய் காட்சி அளித்த என்முற்றத்து மல்லிகை, என்பின்னேரங்களை, இன்பமாக்கிய நண்பர்கள், நான் குதுகளித்து மகிழும் எங்களூர் மலை உச்சி, காலாற நடந்து நட்புக்கொண்டாடிய அந்த நீண்ட குளக்கட்டு, அவ்வப்போது நண்பர்களுடனான படகுப் பயணம், மீன் பிடித்து மகிழ்ந்த அந்த மீளாத நிமிசங்கள், அப்பப்பா .... சொல்லி சுகம் காண முடியாத அற்புதப் பொழுதுகள் அவை, இன்னும் இன்னும் மனது சேமித்து ஆனந்தப் படும் அழியாத அனுபவங்கள்,

இன்றுகள். இறுக்கமான நாட்கள் எதையும் நின்று அவதானித்து ரசிக்கின்ற மனோபாவம் மறைந்து போய்விட்ட பொழுதுகள் இவை, ஒரு புன்னகையை உதிர்ப்பதட்கும் நேரமில்லாத வாடகை வாழ்க்கை, நவீனம் ..... நல்லதுதான்
நிம்மதியையும் சந்தோசத்தையும் நாம் அடகு வைத்துத்தான் நாம் அனுபவிக்க வேண்டியுள்ளது, நவீனத்தை......
இந்த பரபரப்புகளுக்குள் தான் நமது கூர்மையான பார்வையின் பிரதியீடாக இலக்கியப் புலத்தை, அல்லது படைப்பு தளத்தை நாம் தெரிவு செய்துள்ளோம், அன்ராடங்களில், நமது சூழலில் நாம் சந்திக்கின்ற,அனுபவக் கலவையின் வெளிப்பாடுகளை ஜீரணிக்க முடியாமல் தான் ஏதொ ஒரு வகையில் இறக்கி வைக்கிறோம், மனித அவலங்கள் முடிவுக்கு வரும் ஒரு நாளில் இந்தப் புலம்பல்களுக்கு அவசியமற்றுப் போகலாம் அது வரைக்கும்...........
வாருங்கள் கை கோர்ப்போம் உறுதியான கொள்கையுடன்...

என்றும் அன்புடன்,
நாச்சியாதீவு பர்வீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக